சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தென்னிந்தியாவில் மூன்று மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் தலைமையிலான அதிரடி போலீஸார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், வீரப்பன் சம்பவத்தை, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் ‛வீரப்பன் - சேசிங் தி பிரிகண்ட்' என்ற பெயரில் புத்தமாக எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அக்ஷ்ய் குமாரிடம், வீரப்பன் - விஜய குமார் இந்த இரண்டு ரோல்களில் உங்களுக்கு யாருடைய ரோலில் நடிக்க ஆசை என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ‛‛இரண்டு பேரின் கேரக்டரும் மிகவும் ஆர்வம் அளிக்கும் வகையில் உள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் நான், விஜயகுமார் ரோலில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த ஆபரேஷனை பக்காவாக திட்டமிட்டு, அதை தனது புத்திசாலிதனத்தால் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் அவர் தான்'' என்று கூறியுள்ளார்.