பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்தியாவில் மூன்று மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் தலைமையிலான அதிரடி போலீஸார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், வீரப்பன் சம்பவத்தை, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் ‛வீரப்பன் - சேசிங் தி பிரிகண்ட்' என்ற பெயரில் புத்தமாக எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அக்ஷ்ய் குமாரிடம், வீரப்பன் - விஜய குமார் இந்த இரண்டு ரோல்களில் உங்களுக்கு யாருடைய ரோலில் நடிக்க ஆசை என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ‛‛இரண்டு பேரின் கேரக்டரும் மிகவும் ஆர்வம் அளிக்கும் வகையில் உள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் நான், விஜயகுமார் ரோலில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த ஆபரேஷனை பக்காவாக திட்டமிட்டு, அதை தனது புத்திசாலிதனத்தால் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் அவர் தான்'' என்று கூறியுள்ளார்.