ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல தோல்விப்படங்களால் கடந்து இரண்டு வருடங்களாக துவண்டு கிடந்த மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரிலீஸான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தை திலீஷ் போத்தன் என்கிற அறிமுக இயக்குனர் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருந்தார். இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆஷிக் அபு இந்தப்படத்தை தயாரித்திருந்தார். இந்த வெற்றியின் காரணமாக மீண்டும் திலீஷ் போத்தன் டைரக்சனில் 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து பஹத் பாசில் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் மது சி.நாராயணன் என்கிற புதியவர். இவர் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல பஹத் பாசிலுக்கு ஹீரோ அந்தஸ்த்தை கொடுத்த '22 பீமேல் கோட்டயம்' படத்தில் இயக்குனர் ஆஷிக் அபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அந்தவிதமாக இரண்டு படங்களிலும் பணியாற்றியதன் மூலம் பஹத் பாசிலின் நட்பை சம்பாதித்து விட்டார் மது சி.நாராயணன்..
அடுத்ததாக 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் கதாசிரியான ஷ்யாம் புஷ்கரனிடம் தன்னிடம் உள்ள ஒரு ஒன்லைனை கொடுத்து டெவலப் பண்ணித் தரும் படி கேட்டார் மது.. அந்த ஒன்லைன் பிடித்துவிடவே, ஷ்யாம் புஷ்கரன் அதற்கு அதற்கான கதை வடிவம் கொடுத்துவிட்டார். முழுக்கதையையும் படித்து பார்த்த மகேஷிண்டே பிரதிகாரம் இயக்குனர் திலீஷ் போத்தனுக்கும் இந்த கதை பிடித்துவிட, தானும் கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரனும் இணைந்து இந்தப்படத்தை தயாரிப்பதாக சொல்லிவிட்டார்கள். உடனே இந்த மூவரும் போய் பஹத் பாசிலின் முன்னால் நிற்க, தனக்கு வெற்றியும் மறுவாழ்வும் கொடுத்த இந்த கூட்டணியை பஹத் பாசிலால் உதறத்தான் முடியுமா என்ன..? சந்தோஷத்துடன் டபுள் ஒகே சொல்லிவிட்டாராம்.