ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்.டி.வாசுதேவன் நாயரால் மகாபாரத கதையை தழுவி எழுதப்பட்ட ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான முறையில் திரைப்படமாக 'மகாபாரதா' என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். 2018ல் ஆரம்பித்து 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.. ஆனால் இந்தப்படத்தை எடுப்பதற்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரளாவில் உள்ள சங் பரிவார் அமைப்பு..
இதுபற்றி சங் பரிவார் கூறியுள்ளதாவது, “எம்.டி.வாசுதேவன் நாயர் மனதில் தோன்றியதெல்லாம் மகாபாரதம் ஆகிவிடமுடியாது.. ஆயிரம் கோடி என்ன பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் எடுத்தால் கூட ரண்டமூழம், மகாபாரதம் ஆகாது. அது மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றும், அடுத்த தலைமுறைக்கு தவறாக சொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தப்படத்திற்கு மகாபாரதா என டைட்டில் வைத்ததை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர உள்ளோம்” என கூறியுள்ளனர்..