இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாரூக்கான். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் குள்ள மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி எதை அவர் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் என பார்ப்போம்.... ‛‛சிலர் என்னிடம் 1 நிமிடம் பேட்டி தர முடியுமா என்கிறார்கள்... ஒரே வார்த்தையில் உங்களைப்பற்றி விவரிக்க முடியுமா...?, அது எப்படி முடியும், முடியாது. அதேப்போன்று தான் ஒரு நிமிட பேட்டியில் என்ன சொல்லிவிட முடியும். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கே 52 வருடங்களாகிவிட்டது. அதிலும் 10 சதவீதம் தான் என்னைப்பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். ஆகவே இதுபோன்ற விஷயம் தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.