‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாரூக்கான். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் குள்ள மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி எதை அவர் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் என பார்ப்போம்.... ‛‛சிலர் என்னிடம் 1 நிமிடம் பேட்டி தர முடியுமா என்கிறார்கள்... ஒரே வார்த்தையில் உங்களைப்பற்றி விவரிக்க முடியுமா...?, அது எப்படி முடியும், முடியாது. அதேப்போன்று தான் ஒரு நிமிட பேட்டியில் என்ன சொல்லிவிட முடியும். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கே 52 வருடங்களாகிவிட்டது. அதிலும் 10 சதவீதம் தான் என்னைப்பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். ஆகவே இதுபோன்ற விஷயம் தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.