தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயன், 2-வது வாரத்தில் ஆர்யா, 3-வது வாரத்தில் விஜய்சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், வருகிற சனிக்கிழமை நடிகை ரேவதி கலந்து கொள்கிறார். அந்த எபிசோடின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண்-ரேவதி ஆகிய இருவரும்தான் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ராஜ்கிரணுக்கு உடல்நிலை சரியில்லாதததால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். மேலும், வெளியில் தெரியாமல் சமூக சேவை செய்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வெளிச்சம் போட்டுகாட்டும் இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுநலம் கொண்ட சாமானியர்களை வெளிச்சத்துக் கொண்டு வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் என்னதான் திரை பிரபலங்கள் கலந்து கொண்டபோதும் சமூக சேவையாற்றும் நபர்களை முன்னிறுத்திதான் இந்த நிகழ்ச்சி நடத்துப்படுமாம். அதோடு, 13 எபிசோடு இதே பாணியில் செல்ல, அதற்கடுத்து இன்னும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.