வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சமீபகாலமாக ஹீரோயின்களின் நடிப்பில் நிறையவே மாற்றம் தெரிகிறது. சும்மா மரத்தை சுற்றி ஹீரோவுடன் டூயட் ஆடாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்தவகையில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை தொடர்ந்து தமன்னாவும் அந்த மாதிரி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பாகுபலி படத்தில் வாள் வீசும் பெண்ணாக நடித்திருக்கும் தமன்னா, அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணாக நடிக்க உள்ளார். இப்படத்தை வாசு பாக்னானி தயாரிக்கிறார்.
இதுப்பற்றி தமன்னா கூறியிருப்பதாவது... ‛‛பாகுபலி படம் தான் என்னை வித்தியாசமான வேடங்களில் நடிக்க உதவியது. ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆகையால் நானும் இனி வித்தியாசமான ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளேன். வாசு பாக்னானி படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக நடிக்கிறேன். இதுவரை நான் நடித்திராத முற்றிலும் வித்தியாசமான வேடம் இது'' என்று கூறியுள்ளார்.