ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ‛உத்தா பஞ்சாப்' படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகை ஆலியா பட்டிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. சமீபத்தில் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்தித்த ஆலியாவிடம், விருது கிடைக்காதது உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆலியா, ‛‛எதற்காக வருத்தப்படணும், நான் எங்கும் போய்விடவில்லை. இன்னும் காலம் இருக்கிறது, நிச்சயம் வருங்காலங்களில் நான் விருது பெறுவேன். இப்போதைக்கு எனக்கு எந்த வருத்தமும் கிடையாது, ஆகையால் நீங்களும் வருத்தப்பட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூருடன் ‛டிராகன்' என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.