பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன் ராம்பால். இன்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேமிராமேன் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் அர்ஜூன் ராம்பால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஷோபித் என்ற கேமிராமேன், ஓட்டல் அறை அருகே நின்றிருந்த அர்ஜூனை படம் எடுக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜூன் ராம்பால், கேமராவைப் பிடுங்கி எறிந்ததுடன் ஷோபித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜூன் ராம்பால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தம்மை அர்ஜூன் ராம்பால் ஏன் தாக்கினார் என்று தெரியவில்லை என்றும், அங்கிருந்த போலீசாரும் தமக்கு ஒத்துழைப்பு அளிக்கவிலை எனவும் ஷோபித் தெரிவித்துள்ளார்.