ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிப்பு வரும் போதெல்லாம் விமர்சனங்கள் வருவது வழக்கம். அது போல இந்த ஆண்டும் அப்படி ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது 'தங்கல்' படத்தில் நடித்ததற்காக ஆமீர்கானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
அதே போல், தமிழில் 'அப்பா' படத்திற்கு ஏதாவது விருதும், 'ஜோக்கர்' படத்திற்கு மேலும் சில விருதுகளும் வழங்கப்பட்டிருக்கலாம் என இங்கும் கருத்துகள் எழுந்துள்ளன. '24' படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது கூட விமர்சிக்கப்படுகிறது. அந்தப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் முழு படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவில்லை என்றும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிரண் டியோஹன்ஸ் என்பவர்தான் ஒளிப்பதிவு செய்தார் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தேசிய விருதுகளைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று டிவிட்டரில் 'தேசிய விருதுகள் பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக' பதிவிட்டிருந்தார். மற்றபடி வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை. 2016ம் ஆண்டில் 'அகிரா' என்ற ரீமேக் படத்தை இயக்கியதைத் தவிர அவர் வேறு எந்தப் படத்தையும் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அப்படியிருக்க அவர் தேசிய விருதுகள் அறிவிப்பு மீதான தன்னுடைய கோபத்தை பதிவிட்டதன் காரணம் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
அப்படியென்றால் 'ஜோக்கர்' போன்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை அவர் எதிர்க்கிறாரா என்றும் கேள்விகள் எழுகிறது. தேசிய விருதுகளை தைரியமாக விமர்சிக்க முன்வந்தவர் எதற்காக அதை விமர்சிக்கிறேன் என்பதை இன்னும் தெளிவான காரணத்துடன் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள்.