ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜான் ஆபிரஹாம், தமன்னா நடிப்பில் உருவாகும் படம் ‛சோர் நிகர் கே பாகா'. அமர் கவுசிக் இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. ஜான் ஆபிரஹாம் போலீசாகவும், தமன்னா விமனப் பணிப்பெண்ணாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ்வும் இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி ராஜ்குமார் கூறியதாவது... ‛‛‛சோர் நிகர் கே பாகா' படத்தில் நான் நடிக்கிறேன். இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம், நானும், ஜானும் சினிமா தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளோம். அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
‛சோர் நிகர் கே பாகா' படத்தை ஜான் ஆபிரஹாம், அர்ஜூன் என் கபூர் மற்றும் ராஜ் குமார் குப்தா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.