தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் மம்முட்டி நடித்த கசபா படம் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி. ஆனால் அதன்பின் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த வருடம் மீண்டும் ஒரு வாய்ப்பாக சமுத்திரக்கனியின் அப்பா மலையாள ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி, பூஜை முடிந்த சில நாட்களிலேயே அந்தப்படத்தின் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் இழந்த வாய்ப்பை ஈடு செய்யும் விதமாக மலையாளத்தில் இருந்து மீண்டும் மம்முட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடிவந்துள்ளதாம். கடந்த 2014ல் மம்முட்டியை வைத்து ராஜாதி ராஜா என்கிற இயக்கிய அஜய் வாசுதேவ் தான் இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.. சூப்பர்ஹிட்டான புலி முருகன் படத்தின் கதாசிரியரான உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார்.. வரலட்சுமிக்கு முன் அந்த கேரக்டரில் நடிக்க ராய் லட்சுமியைத்தான் ஒப்பந்தம் செய்வதாக திட்டமிட்டிருந்தார்கள்.. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு இப்போது வரலட்சுமியின் கைகளுக்கு சென்றுள்ளது.