டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய படங்களிலேயே நடிக்க விருப்பமில்லை என கூறிய பாலிவுட் நடிகை ஆலியா பட்டை மீண்டும் டோலிவுட்டிற்கு அழைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஹிந்தி என பல மொழிகளில் வெற்றி கண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடிக்க மறுத்த ஆலியா பட் அதே போல் தெலுங்கு பட வாய்ப்புகளையும் மறுத்து வருகின்றார். நாகார்ஜூனா தனது இளைய மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில்:தி பவர் ஆப் ஜூவா படத்தில் ஆலியா பட்டை நாயகியாக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டார்.
ஆனால் ஆலியா மறுத்து விடவே சேஷா சைகள் அகில் படத்தில் நாயகியாக நடித்தார். இந்நிலையில் மீண்டும் அகில் படத்தில் நடிக்க ஆலியாவிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரலில் துவங்கவுள்ளன. நாகார்ஜூனா தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஆலியாவிடம் பேச்சு வார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறையாவது அகிலுக்கு ஆலியா ஒகே சொல்வாரா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.