'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய சினிமாவில் ஷங்கர் ஒருவர் தான் பிரமாண்டமான படம் எடுக்கும் இயக்குநர்களில் நம்பன் ஒன் இயக்குநராக இருந்தார். பாகுபலி படம் அந்தப்பெருமையை எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு வழங்கிவிட்டது. அது மட்டுமல்ல, பாகுபலி படத்தின் அபரிமிதமான வெற்றி, பாகுபலி-2 படத்தை வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.
அதாவது பாகுபலி - 2 படத்தை 3டியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. அதுமட்டுமல்ல, ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் பாகுபலி- 2 படத்தை வெளியிட உள்ளனர். பாகுபலி- 2 படத்தை பின்பற்றி தான் இயக்கி வரும் 2.0 படத்தையும் உருவாக்கி வருகிறார் ஷங்கர்.
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷ்ய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0, கடந்த வருடம் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இப்படத்தின் இறுதி பணிகளான பின்னணி இசை மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் (VFX) ஆகியவை மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் 2.0 படத்தை, பாகுபலி-2 படத்தைப் போலவே 3டி தொழில் நுட்பத்திலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு, ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிடவும் உள்ளனர்.