பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் 'மாயா'. முழுக்க முழுக்க நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக... கதாநாயகியாக 'அதே கண்கள்' படத்தின் நாயகி ஷிவதா நடிக்கிறார். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்த வாமிகாவும் இணைந்துள்ளாராம். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
'மாயா' படத்திற்கு இசையமைத்த ரான் யோஹன்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு என்ன என்பதை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாயா படத்தின் வெற்றி சென்ட்டிமெண்ட் காரணமாக மா என்ற எழுத்தில் தொடங்கும் டைட்டிலையே வைக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.