இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். இதில் ஏற்கனவே தாணுவின் வழிகாட்டுதலில் செயல்படும் டி.சிவா அணி, ராதாகிருஷ்ணன் அணியில் இணைந்து ஓரணியாக மாறினார். இதற்கான நிகழ்ச்சி கடந்தவாரம் நிகழ்ந்தது. அப்போது பேசிய தாணு, விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு தகுதியற்ற விஷால் இந்த பதவிக்கு வரக்கூடாது, அவரை தோற்கடிக்க கேயார், ஜி.சேகரன் ஆகியோரும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கலைப்புலி ஜி.சேகரன் அணியினர், இன்று(மார்ச் 29ம் தேதி) ராதா கிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது தாணு முன்னிலையில் ராதாகிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார் ஜி.சேகரன்.
இதன்மூலம், விஷாலை தோற்கடிக்க மூவர் அணி, ஓரணியாக இணைந்துள்ளனர். இதில் யார் வெல்லபோகிறார்கள் என்று ஏப்.,2-ம் தேதி தெரிந்துவிடும்.