வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஸ்வரூபம் படத்தை அப்போதைய அரசு தடை செய்ததால் தனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் தன் படம் சம்பந்தமாக எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார். அதில் முக்கியமானது விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அப்போது பெரும் பிரச்னை எழுந்தது. இதனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக., அரசு தடை விதித்தது. பின்னர் பல தடைகளை தாண்டி அந்தப்படத்தை ரிலீஸ் செய்தார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல், தற்போது, அப்போதைய தமிழக அரசு மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
‛‛விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது. பின்னர் சட்டப்பூர்வமாக அந்த தடை நீக்கப்பட்டது. இருந்தாலும் அப்போதைய அரசு படத்திற்கு மீண்டும் தடை விதித்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தடை நீக்கப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்காக எனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன், நான் அவமானப்படுத்தப்பட்டேன், இன்னும் சொல்லப்போனால் என்னை அழிக்கும் எண்ணம் கூட இருந்தது.
விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த தடையால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழலால் நாடு மூழ்கி கிடக்கிறது, அதனால் எதையும் சிறிதாக எடுத்து கொள்வதுடன் மறக்ககூடியதாகவும் உள்ளது. மறதி ஒரு தேசிய வியாதி. நான் எதையும் மறக்க மாட்டேன். என்னுடைய வருமானத்தை மூடி மறைக்காமல், நேர்மையான முறையில் வரி கட்டும் குடிமகன் நான். அப்படிப்பட்ட எனக்கு இது மிகப்பெரிய இழப்பு தான். பொதுமக்களுக்கு நன்றி, நான் இன்னும் உலாவி கொண்டிருக்கிறேன். அடுத்தப்படியாக விஸ்வரூபம்-2 பாகம் வெளியாக உள்ளது, இதற்கு எந்த பிரச்னையும் வராது என்று நம்புகிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.