டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1960-70களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஆஷா பரேக். கடைசியாக 1999-ம் ஆண்டு சர் ஆன்கோன் பர் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அவ்வப்போது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஷாவிடன், உங்களின் வாழ்க்கை படம் உருவானால் அதில் யார் உங்களது வேடத்திற்கு பொறுத்தமாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆஷா, எனது வேடத்திற்கு பிரியங்கா சோப்ரா பொறுத்தமாக இருப்பார், அவரிடத்தில் கொஞ்சம் குறும்புதனம் உள்ளது. அதேப்போன்று தீபிகாவையும் நடிக்க வைக்கலாம், அவரும் சரியாக இருப்பார். அதேசமயம் எனது வாழ்க்கை சினிமாவாக உருவானால் அதை சஞ்யச் லீலா பன்சாலி தான் படமாக இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆஷா பரேக்கின் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி, அதை புத்தமாக எழுதியுள்ளார் கலித் முகமது. இப்புத்தக வெளியீட்டு விழா வருகிற ஏப்., 10-ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது. நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.