டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை தமிழர்களுக்கு வழங்கும் விழா ஏப்., 9-ம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இங்குள்ள சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஆனாலும் இனி இதுபோன்ற செயல்களை தடுக்காதீர்கள் என்று ரஜினி வேண்டுகோளும் வைத்தார்.
ரஜினி, இலங்கை பயணத்தை ரத்து செய்ததை சிலர் விமர்சனமும் செய்தனர். இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ரஜினி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ரஜினி மேலும் கூறியுள்ளதாவது: ‛‛இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடி வரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.