ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சவுகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் பொட்டு. இதில் பரத், சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்ட ஹாரர் திகில் படம். இடஒதுக்கீடு மூலம் மலைவாழ் மாணவி ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கிறது. ஆனால் அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து விரட்டிவிட்டு அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்க நினைக்கிறது கல்லூரி நிர்வாகம். இந்த டார்ச்சரில் தற்கொலை செய்து கொள்ளும் அந்த மலைவாழ் மாணவி அதே கல்லூரியில் படிக்க வரும் பரத் உடலுக்குள் புகுந்து தன்னை தற்கொலை செய்ய வைத்தவர்களை பழிவாங்குகிற கதையாம்.
இந்தப் படத்தை தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும் இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் உருவாக்கி வருகிறார்கள். 90 நாட்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது 3 மொழிகளில் டப் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. நமீதா பெண் அகோரி வேடத்திலும், இனியாக மலைவாழ் பெண் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள். பொட்டு மூலம் பரத் மீண்டும் பாலிவுட்டுக்குள் நுழைகிறார். ஏற்கனவே அவர் ஜாக்பாட் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.