சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரித்துள்ள படம் 8 தோட்டாக்கள். வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தபடத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் நாசர் பேசுகையில், நானும், எம்.எஸ்.பாஸ்கரும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளாக சினிமாவில் பயணிக்கத் தொடங்கினோம். மாமன், மச்சான் என்று பேசிக்கொள்வோம். அப்போது நடிக்க முயற்சி எடுத்தபோது, நம்மளை யெல்லாம் யார் நடிக்க வைக்கப்போகிறார் என்று நினைத்துக்கொள்வோம். அதையடுத்து நடிகராக விட்டோம். நான் பலதரப்பட்ட வேடங்களில் நடிப்பது போன்று எம்.எஸ்.பாஸ்கரும் நடித்து வருகிறார்.
முக்கியமாக காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வந்துள்ள அவர், இந்த 8 தோட்டாக்கள் படத்தில் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்தபடத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி. அதன்பிறகு எம்.எஸ்.பாஸ் கரின் சினிமா கேரியரே மாறிவிடும். அவரை இன்னும் வித்தியாசமான கதாபாத் திரங்களில் நடிக்க வைக்க முன்வருவார்கள்.
மேலும், இந்த படத்தை இயக்கியுள்ள ஸ்ரீகணேஷ் வயதில் சிறியவராக இருப்பதால், பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால், முதல் நாள் முதல் காட்சியிலேயே அவர் தனது திறமையை நிரூபித்துவிட்டார். அதன்பிறகு அவர் மீது பெரிய நம்பிக்கையுடன் அதிக ஈடுபாட்டுடன் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினேன். அந்தவகையில், துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் வரிசையில், இந்த ஸ்ரீகணேசும் இடம்பிடிப்பார் என்பதை இப்போதே என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றார்.