ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
போடா போடி, நானும் ரெளடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். தற்போது சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவின் மூன்றாவது காதலர் என்று கூறப்பட்டு வரும் அவர், நயன்தாரா நடித்து திரைக்கு வரத்தயாராகியுள்ள டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதையடுத்து துருவங்கள் 16, மாநகரம் போன்ற படங்களுக்கு யுஏ கொடுத்தனர். ஆனால் அந்த படங்களுக்குப்பிறகு வந்த பல படங்களுக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் தணிக்கைக்குழு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.