என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
ரஜினி நடித்து வரும் 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் இலங்கை பயணத்தை ரத்து செய்விட்டதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து லைகா நிறுவனம் விளக்கம் வழங்கியுள்ளது......
அதில் " ரஜினி இலங்கை பயணம் செல்லுவதற்காக ஏற்பாடுகள் நிறைய செய்து இருந்தோம் ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டார். பலர் அவர்களின் சுயலாபத்திற்காக வதந்திகளை பரப்பி வருகின்றனர் . தொழில் போட்டியாளர்களும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவுடன் எங்களுக்கு தொழில் தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்பி வருகின்றனர். எங்களது திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது .ரஜினியின் வருகையின் போது மேலும் பல நலத்திட்டங்கள் தொடங்க இருந்தோம். இலங்கை தமிழர்களின் நலனுக்காக ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் தலைவர்களுக்கு எங்கள் பாராட்டுகள் . இலங்கை தமிழ்களின் வாழ்கைத்தரம் மேம்பட அனைவரும் பாடுபட வேண்டும். திட்டமிட்டபடி ஏப்.10ல் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்" என்று லைகா நிருவனம் கூறியிருக்கிறது.