பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கோலிவுட்டில் நேற்று ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வௌியாகின. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா, இல்லையா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் நேற்று வௌியான படங்களில் கடுகு, எங்கிட்ட மோதாதே படங்கள் தான் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா உள்ளிட்ட பலரது நடிப்பில் வௌியான இப்படத்திற்கு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் ஒரு நல்ல மெசேஜ்ஜூம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு பெற்றுள்ளது. கடுகு படத்தை இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பல திரையுலகினரும் பாராட்டியுள்ளனர். இந்தாண்டின் கனமான பதிவாக கடுகு படம் இருக்கும் என்றும், ராஜகுமாரனின் யதார்த்த நடிப்பு சிறப்பாக இருப்பதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். கூடவே இப்படியொரு படத்தை கொடுத்த விஜய் மில்டனையும் பாராட்டியுள்ளனர்.