இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இவர்களை நேற்று நடிர் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் அருண் ஜெட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ்... ‛‛விவசாயிகளின் பிரச்னைக்காகத்தான் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியையும், இன்று அருண் ஜெட்லியையும் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னையை உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும். இதை ஒரு மாநில விவசாயிகளின் பிரச்னையாக பார்க்காமல், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், ‛‛விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தோம், இதை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும், இனி விவசாயிகள் தற்கொலை நடக்க கூடாது'' என்றார்.
மத்திய அமைச்சர் உடனான சந்திப்பின் போது விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.