ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல எழுத்தாளரும், இலக்கியவதியமான அசோகமித்ரன் நேற்றுமுன்தினம் காலமானார். இவரின் மறைவுக்கு கமல் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அசோகமித்ரனின் மறைவுக்கு இயக்குநர் வஸந்த் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரின் மறைவு தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும், தனக்கு ஒரு குருவாகவும், தந்தை போன்றும் இருந்தார் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... 1980களில் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் அவரிடம் தான் கற்று கொண்டேன். எனக்கு பல வழிகளில் குருவாக இருந்துள்ளார். அவர் எழுதிய புலிவேஷம், மானசரோவர், தண்ணீர் போன்ற நாவல்கள் மிகவும் பிடித்தவை.
தற்போது அவர் எழுதிய இரண்டு நாவல்களான ‛‛தண்ணீர், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'' ஆகியவற்றை மையமாக வைத்து இரண்டு படங்களை எனது சொந்த தயாரிப்பில் இயக்கி வருகிறேன். ஏப்ரல் மாதத்தில் இந்த படங்களை அவருக்கு திரையிட்டு காட்டலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். கடந்தவாரம் தான் போனில் அவருடன் பேசினேன், அப்போது நான் இயக்கும் படங்கள் பற்றி கேட்டறிந்தார். அவரின் மறைவை சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு தந்தை போன்று இருந்தார், எனது படங்கள் ரிலீஸாகும் போது டைட்டில் கார்ட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பெயர் இடம்பெயரும்'' என்றார்.