Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நந்தினி கதை என்னுடையது: சுந்தர்.சி மீது துணை இயக்குனர் பரபரப்பு புகார்

25 மார், 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Assistant-director-complaint-against-Sundar-C-regarding-Nandhini-serial

இயக்குனர் சுந்தர்.சி எழுதியுள்ள கதை நந்தினி. தற்போது இது சின்னத்திரையில் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு வெங்கட்ராகவன் திரைக்கதை அமைத்துள்ளார், பத்ரி வசனம் எழுதுகிறார். ராஜ்கபூர் இயக்குகிறார். மாளவிகா வாலஸ், நித்யா ராம், பேபி ஆதிரி, ராகுல் ரவி, காயத்ரி ஜெயராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.


கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான பட்ஜெட்டில் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி கதை என்னுடையது என்னை சுந்தர்.சி ஏமாற்றி விட்டார் என்று உதவி இயக்குனரும், நடிகருமான வேல்முருகன் என்பவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:


நான் சுந்தர்.சி.யிடம் உதவியாளராக பணியாற்றினேன். என்னுடைய கதை தான் நந்தினி. டி.வி.தொடர் ஆரம்பிக்கும்போது எனது கதையை கேட்டு வாங்கியவர் கதைக்கான சம்பளத்தை தருவதாக கூறினார். ஆரம்பத்தில் கொடுக்கவும் செய்தார். அதன் பிறகு தொகையை குறைத்தார். பிறகு அதையும் நிறுத்திவிட்டார். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இதை நான் சும்மா விடப்போவதில்லை. இதுவரை என்னை நண்பனாக பார்த்த அவர் இனி எதிரியாக பார்ப்பார். எனது இன்னொரு முகத்தை காட்டுவேன். நந்தினியின் கதை என்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. என்று கூறியுள்ளார்.


இது குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கதின் முன்னாள் தலைவர் விசு வெளியிட்டு ஆடியோ பதிவில்... "எனக்கு வேல்முருகனையும் தெரியும், சுந்தர்.சியும் தெரியும். வேல்முருகன் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க கூடாது என்று விரும்புகிறேன். சிலர் என்னதான் உயர்ந்த இடத்துக்குப்போனாலும் இப்படி நடந்து கொள்வதுண்டு. ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் கதை கேட்டுவிட்டு இந்த கதையை என்னுடைய கதை என்று போட்டுக் கொள்கிறேன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு. நான் சுந்தர்.சியை சொல்லவில்லை. என் அனுபவத்தை சொன்னேன்" என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in