தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் சுந்தர்.சி எழுதியுள்ள கதை நந்தினி. தற்போது இது சின்னத்திரையில் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு வெங்கட்ராகவன் திரைக்கதை அமைத்துள்ளார், பத்ரி வசனம் எழுதுகிறார். ராஜ்கபூர் இயக்குகிறார். மாளவிகா வாலஸ், நித்யா ராம், பேபி ஆதிரி, ராகுல் ரவி, காயத்ரி ஜெயராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான பட்ஜெட்டில் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி கதை என்னுடையது என்னை சுந்தர்.சி ஏமாற்றி விட்டார் என்று உதவி இயக்குனரும், நடிகருமான வேல்முருகன் என்பவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
நான் சுந்தர்.சி.யிடம் உதவியாளராக பணியாற்றினேன். என்னுடைய கதை தான் நந்தினி. டி.வி.தொடர் ஆரம்பிக்கும்போது எனது கதையை கேட்டு வாங்கியவர் கதைக்கான சம்பளத்தை தருவதாக கூறினார். ஆரம்பத்தில் கொடுக்கவும் செய்தார். அதன் பிறகு தொகையை குறைத்தார். பிறகு அதையும் நிறுத்திவிட்டார். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இதை நான் சும்மா விடப்போவதில்லை. இதுவரை என்னை நண்பனாக பார்த்த அவர் இனி எதிரியாக பார்ப்பார். எனது இன்னொரு முகத்தை காட்டுவேன். நந்தினியின் கதை என்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. என்று கூறியுள்ளார்.
இது குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கதின் முன்னாள் தலைவர் விசு வெளியிட்டு ஆடியோ பதிவில்... "எனக்கு வேல்முருகனையும் தெரியும், சுந்தர்.சியும் தெரியும். வேல்முருகன் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க கூடாது என்று விரும்புகிறேன். சிலர் என்னதான் உயர்ந்த இடத்துக்குப்போனாலும் இப்படி நடந்து கொள்வதுண்டு. ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் கதை கேட்டுவிட்டு இந்த கதையை என்னுடைய கதை என்று போட்டுக் கொள்கிறேன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு. நான் சுந்தர்.சியை சொல்லவில்லை. என் அனுபவத்தை சொன்னேன்" என்று கூறியுள்ளார்.