மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மிகப்பெரிய அதிர்ச்சி தான் கடந்தமாதம் பாவனா எதிர்பாராத விதமாக சந்தித்தது. ஷூட்டிங் முடிந்து காரில் வந்தவரை சில விஷமிகள் கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்க, ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பினார் பாவனா. போலீஸில் புகார், குற்றவாளிகள் கைது, ஆறுதல் ஆகிய படலங்கள் ஒருபக்கம் தொடர்ந்தாலும் அப்போதைய மனநிலையில் இனிமேல் தன்னால் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாது என கூறினார் பாவனா. பின்னர் நடிகர் பிருத்விராஜ் தான் அவருக்கு தைரியமூட்டி தன்னுடன் 'ஆடம்' என்கிற படத்தில் நடிக்க வைத்துக்கொண்டு வருகிறார்.
இந்த நிகழ்வு நடந்த அடுத்த சில தினங்களிலேயே தனது காதலரான கன்னட தயாரிப்பாளர் நவீனுடன் நிச்சயதார்த்தம் நடத்தி தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட பாவனா, அதன்பின் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார். இதோ பாவனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'ஹனி பீ-2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் எல்லாம் உற்சாக மனநிலையில் படக்குழுவினருடன் கலந்து கொண்டார் பாவனா. அவர் முன்புபோல ஆனது கண்டு படக்குழுவினர் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.