‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் கரண் ஜோகர். கடைசியாக இவரது இயக்கத்தில் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படம் வெளியானது. இதில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், படமும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. இந்தப்படம் வெளியானபோது ஐஸ்வர்யா ராய், மிகவும் கவர்ச்சியாக நெருக்கமாக நடித்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்ததோடு, இதுதொடர்பாக கரண் மீது அமிதாப் குடும்பத்தார் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை அமிதாப் குடும்பத்தார் மறுத்தனர்.
ஆனால் சமீபகாலமாக கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய் இடையே பிரச்னை நிலவி வருவது கண்கூடாக தெரிகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானபோது, அவருக்கு ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கரண் ஜோகர் மட்டும் அஞ்சலி செலுத்த வரவே இல்லை. மேலும் கரண் ஜோகர், ஐஸ்வர்யாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அவரிடம் கதை சொன்னதாகவும், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஐஸ்வர்யா - கரண் இடையே பிரச்னை நிலவுவது உறுதியாகியுள்ளது என பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.