'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் கரண் ஜோகர். கடைசியாக இவரது இயக்கத்தில் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படம் வெளியானது. இதில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், படமும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. இந்தப்படம் வெளியானபோது ஐஸ்வர்யா ராய், மிகவும் கவர்ச்சியாக நெருக்கமாக நடித்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்ததோடு, இதுதொடர்பாக கரண் மீது அமிதாப் குடும்பத்தார் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை அமிதாப் குடும்பத்தார் மறுத்தனர்.
ஆனால் சமீபகாலமாக கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய் இடையே பிரச்னை நிலவி வருவது கண்கூடாக தெரிகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானபோது, அவருக்கு ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கரண் ஜோகர் மட்டும் அஞ்சலி செலுத்த வரவே இல்லை. மேலும் கரண் ஜோகர், ஐஸ்வர்யாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அவரிடம் கதை சொன்னதாகவும், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஐஸ்வர்யா - கரண் இடையே பிரச்னை நிலவுவது உறுதியாகியுள்ளது என பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.