டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.
இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.
இருதினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் நெல்லை வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் இதேகருத்தை வலியுறுத்தி கமல் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கும்பகோணத்திலும் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின், கும்பகோணம் மாவட்ட செயலாளர் பாலா என்பவர், கும்பகோணம் 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட இருக்கிறது.