பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்த ஆண்டில் முதன் முறையாக இந்த வாரம் 9 நேரடி தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வெற்றி குறைந்து விட்டது. தியேட்டர்கள் குறைந்து விட்டது, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறவர்கள் குறைந்து விட்டார்கள், திருட்டு விசிடி பெருகி விட்டது. மக்கள் செல்போனில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் சினிமா தாயாரிப்பும் வெளியீடும் குறையவில்லை.
ஒரு வாரத்திற்கு இரண்டு சிறு பட்ஜெட் படங்களும், ஒரு பெரிய பட்ஜெட் படமும், ஒரு டப்பிங் படமும்தான் வெளிவர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அது கடைசிவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்த தீர்மானத்தை முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்களே அதனை மீறியதுதான் பெரிய கொடுமை,
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த வாரம் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை, நட்டி சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள எங்கிட்ட மோதாதே. ஆர்கே, நீது சந்திரா நடித்த வைகை எக்ஸ்பிரஸ், விஜய்மில்டன் இயக்கத்தில் சூர்யா வெளியிடும் கடுகு போன்ற நடுத்தர பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன. இது தவிர அரசகுலம், 1.ஏஎம், 465, தாயம், சாந்தன் ஆகிய படங்களும் வெளிவந்துள்ளன. மொத்தம் 9 படங்கள், லைஃப் என்ற ஆங்கில டப்பிங் படத்தையும் சேர்த்தால் 10 படங்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1280 தியேட்டர்கள்தான் உள்ளன. இதில் 850 தியேட்டர்கள் தான் புதிய படங்களை வெளியிடுகிறவை. இன்று வெளிவந்திருக்கும் இந்த 10 படங்களுக்கு தியேட்டரை பங்கிட்டால் ஒரு படத்துக்கு 85 தியேட்டர்கள் தான் கிடைக்கும். ஆனால் கடுகு படம் 300 தியேட்டரிலும், பாம்பு சட்டை 300 தியேட்டரிலும், வைகை எக்ஸ்பிரஸ் 200 தியேட்டரிலும் எங்கிட்ட மோதாதே 250 தியேட்டரிலும் வெளிவந்துள்ளன. மற்ற படங்கள் 50க்கும் குறைவான தியேட்டர்களில் தான் வெளிவந்திருக்கிறது. அதுவும் ஒரே தியேட்டரில் இரண்டு படங்கள் வெளிவருவதால்தான் இந்த அளவிற்காவது சமாளிக்க முடிந்திருக்கிறது. புதிதாக வரும் தயாரிப்பு சங்க நிர்வாகிகளாவது இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.