அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி ஆர்த்தி. தற்போது வானவில் டிவியில் தினம் தினம் தங்கம், பெண் மேடை மற்றும் பொதிகையில் தம்பதிகளை நேர்காணல் செய்யும் லைவ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் பற்றி ஆர்த்தி கூறுகையில், வானவில் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தினம் தினம் தங்கம் குயிஸ் புரோக்கிராம் மாதிரி. 2 ரவுண்டு வரும். 13 செகண்டுகளில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் அவர்களுக்கு தங்க காசு பரிசு. இப்போது ஆடியன்ஸ் நல்ல பிரிலியண்டாக உள்ளனர். லைவ் ஷோக்களில் கால் பண்ணி அறிவுப்பூர்வமாக பேசிகிறார்கள். அதனால் தினம் தினம் தங்கம் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
அடுத்து, பெண் மேடை -என்ற நிகழ்ச்சி நடத்துகிறேன். பெண்களுக்கான மேடை அமைத்து பேசுகிறோம். வாரந்தோறும் குடும்பம் சார்ந்த ஒரு தலைப்பு எடுத்து பெண்களிடம் கருத்து கேட்கிறோம். அதில் என்னென்ன மாற்றம் செய்யலாம் என விவாதிக்கிறோம். கணவன் மனைவி பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது. குழந்தை வளர்ப்பது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்லும்போது என்னென்ன விசயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படி பெண்களை அடிப்படையாகக்கொண்ட விசயங்கள் எல்லாவற்றையும் எடுத்து பேசுகிறோம். ஒரு தொகுப்பாளினியாய் முடிந்தவரை விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை கொடுத்து வருகிறேன். இது எனக்கு மனதளவில் திருப்திகரமாக உள்ளது.
இதுதவிர, பொதிகையில் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேரம் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இது தம்பதிகளை இன்டர்வியூ செய்யும் கலகலப்பான நிகழ்ச்சி.
இப்போது இந்த நிகழ்ச்சிகளில்தான் பங்கேற்று வருகிறேன். இதையடுத்து சமூகத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம், இன்றைக்கு பெண்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரங்களைகூட சந்தேகமாக பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் கூடி விளையாண்டால் சந்தோசமாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது எல்லா இடங்களிலும் கேமரா வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பெற்றோர்கள், ஆண் பிள்ளைகளை வளர்க்கும்போது பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு, அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ஆண் பிள்ளைகள் தானாக வளர்ந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். அடிப்படையே தவறு. ஆண், பெண் ஒரு வீட்டில் இருந்தால் பெண் பிள்ளைகளைத்தான் வேலை செய்யச்சொல்கிறார்கள். ஆண்களை கண்டுகொள்வதே இல்லை. இப்படி செய்வதே தவறு. இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்கிறார் தொகுப்பாளினி ஆர்த்தி.