'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படப்பிடிப்பிற்கு சமமாக தனது குடும்பதினருக்கும் நேரம் ஒதுக்குபவர். ஒவ்வொரு படத்தை முடித்த பின்னரும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வதையும் மகேஷ் பாபு வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு இரவு பகலாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வருவதால் தனது மகனையும் செல்ல மகளையும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சந்திக்கவில்லையாம். இதனால் சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மகேஷ் பாபுவைச் சந்திக்க குழந்தைகள் கௌதம் கிருஷ்ணா, சித்தாராவுடன் அவரது மனைவி நம்ரதா சென்னைக்கு விஜயம் செய்துள்ளனர். சென்னைக்கு கிளம்புவதற்கு முன்னால் தனது குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நம்ரதா தந்தையைக் காண ஆர்வமுடன் காத்திருக்கும் குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.