‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்காமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இப்படத்தில் இடம் பெற்ற பாடலான 'மறு வார்த்தை' பாடலை வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து நாளை மறு நாள் 25ம் தேதி அடுத்த சிங்கிள் பாடலான 'நான் பிழைப்பேனோ..' என்ற பாடலை வெளியிட உள்ளார்கள். இந்தப் பாடலை 'மிஸ்டர் எக்ஸ்' வெளியிட உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்துள்ளார். அந்த 'மிஸ்டர் எக்ஸ்' யார் என்பது அன்று தெரிய வரும். அந்த மிஸ்டர் எக்ஸுக்காக சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் கூட தனியாக ஒரு கணக்கை ஆரம்பித்துள்ளார்கள்.
அந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்பவர் இசையமைப்பாளர் தர்புகா சிவா தான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சசிகுமார் நடித்த 'கிடாரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா அடுத்து 'பலே வெள்ளையத் தேவா' படத்திற்கும் இசையமைத்தார்.
25ம் தேதியாவது அந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்பவர் தர்புகா சிவா தான் என அறிவிப்பார்களா அல்லது அதன் பின்னும் சஸ்பென்ஸ் வைப்பார்களா ?. கௌதம் மேனனின் படங்கள் வெளிவருவதுதான் சஸ்பென்ஸ் என்று பார்த்தால், இதிலும் ஒரு சஸ்பென்ஸ்.