'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பழசிராஜா'வின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ரந்தமூழம்' என்கிற வரலாற்று நாவலையும் இயக்குனர் ஹரிஹரன் படமாக்கப் போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் கடந்த சில வருடங்களாகவே பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.. ஒரு சிலரோ அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது, இன்னும் அதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் இறங்கினார்கள்.. இதுபற்றி மோகன்லால் கூட எந்த ஒரு தகவலையும் வெளிகாட்டி கொண்டதில்லை..
ஆனால் இந்தப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின்போது தன்னையும் அறியாமல் கூறியுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். ஆம், ரந்தமூழம் படத்திற்கு சண்டைக்காட்சிகளையும் போர்க்காட்சிகளையும் வடிவமைக்க இருப்பது இவர் தான் என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.. மோகன்லாலின் 'புலி முருகன்' மற்றும் தற்போது அவர் நடித்துவரும் 'வில்லன்' ஆகிய படங்களுக்கும் பீட்டர் ஹெய்ன் தான் ஸ்டண்ட் மாஸ்டர்.
ஆனால் இந்தப்படத்தை இயக்குவது 'பழசிராஜா' ஹரிஹரன் இல்லையாம்.. விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவராம். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். காரணம் இந்திய முழுவதும், ஏன் உலகமே அறிந்த மகாபாரதமும் அதில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனும் தான் இந்தப்படத்தின் கதைக்களமும், கதைநாயகனும் ஆவார்கள். பீமனாக நடிப்பவர் சாட்சாத் மோகன்லாலே தான்.