பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.கே.செல்வமணி முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெப்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிவித்தார். அதன்விபரம் வருமாறு....
ரூ.1000, ரூ.500 நோட்டு வாபஸால் தினசரி ஊதியம் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சரியாகியுள்ளதால் மீண்டும் பழைய முறைப்படி தினசரி ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. பெப்சி தொடங்கி 50 ஆண்டுகளாகிவிட்டதால் பொன்விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். பெப்சி தொழிலாளர்கள் இந்தியா முழுக்க பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்கள். எனவே இந்த பொன்விழாவை அனைத்து மொழி கலைஞர்களையும் வரவழைத்து பிரமாண்ட விழாவாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதோடு எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையும் இணைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 100 ஏக்கர் நிலத்தில் உடனடியாக வீடு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்தந்த மாநிலங்கள், தங்கள் மொழி படங்களின் படப்பிடிப்புகளை நடத்த மாநில அரசுகள் உதவி செய்கின்றன, தமிழக அரசும் கட்டண விகிதங்களில் பழைய நடைமுறையை பின்பற்றி படப்பிடிப்புகள் நடத்திட வழி செய்ய வேண்டும். ஹீரோயின்கள், தங்களுக்கான மேக்கப் காஸ்டியூம் உதவியாளர்களை மும்பையிலிருந்து அழைத்து வருவதை தவிர்த்து பெப்சி தொழிலாளர்களையே பயன்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.