ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு சில படங்களில் ஹீரோவாக தலைகாட்டிவிட்டு அந்தப் படங்கள் தோல்வியடைந்ததால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள் பலர்.அவர்களில் ஒருவர் அசோக் செல்வன்.இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததினால் இன்னும் போராட்டமாகவே இருக்கிறது இவருடைய திரையுல வாழ்க்கை.இவர் நடித்துள்ள 'சில சமயங்களில்', 'கூட்டத்தில் ஒருத்தன்' ஆகிய இரண்டு படங்கள் முடிவடைந்தநிலையில் விரைவில் ரிலீசாகவிருக்கின்றன.
இந்தப் படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே அசோக் செல்வன் இங்கே தாக்குப்பிடிக்க முடியும். இல்லை என்றால் தோல்விப்பட ஹீரோ என்ற முத்திரை குத்தப்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.இந்நிலையில் இதுவரை தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் அடுத்து ஒரு தெலுங்குப் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.
பரத் வர்மா என்பவர் அசோக் செல்வனை தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.அவர் அண்மையில் அசோக்செல்வனை சந்தித்து ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார், அந்த கதை அசோக் செல்வனுக்கு பிடித்ததால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.