டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றார். சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவர் பாடல்கள் எழுதினார். தற்போது அந்தப்பாடலை அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பயன்படுத்த இருக்கிறார்கள். சஞ்சய் தத், பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‛டொர்பாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். ஆப்கானிஸ்தான் பின்னணியில் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. ஆப்கனில், சிறுவர்கள் எப்படி தற்கொலை படையாக மாறுகிறார்கள் என்கிற கோணத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சஞ்சய், ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் தான் சஞ்யச் தத் எழுதிய சிறைப்பாடல்களை பயன்படுத்த உள்ளனர். பூமி படப்பிடிப்பை முடித்ததும் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன. இப்படத்தை கிரிஷ் மாலிக் இயக்குகிறார்.