இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் கவண். விஜயசேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில்,
30 வருடங்களாக சயின்ஸ்ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. மீடியாவில் 20 வருடங்களாக மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. டிவி, இன்டர்நெட்டை யெல்லாம் மீறி வாட்ஸ்அப் சர்வசாதாரணமாக செய்திகளை கடத்தி வருகிறது. கோ படத்தில் பத்திரிகை துறைக்கும், அரசியலுக்குமிடையே நடக்கும் ஒரு கதை பண்ணியிருநதேன். மீடியா என்கிறபோது சினிமாவும்தான். பத்திரிகைகள் தகவலை பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் சினிமாவில்தான் ஒரு அரசியலே நிர்ணயிக்க முடிந்தது. அரசியலில் மாற்றங்கள் நடந்துள்ளது. இதில் நடக்கிற சில விசயங்களை வைத்து இந்த படம் பண்ணியுள்ளேன். இதில் அரசியலும் இருக்கு. படத்திலுள்ள வசனங்களில் அரசியல் கனெக்சன் இருக்காது.
சினிமாவில் எந்த கம்பெனியாக இருந்தாலும் இந்த ஹீரோவுடைய கால்சீட் இருக்கு கதை சொல்லுங்க பண்ணலாம் என்பார்கள். ஆனால் ஏஜிஎஸ் அகோரம் நிறுவனத்தைப்பொறுத்தவரை முதலில் கதைதான். ஹீரோ யார் என்றே இருக்காது. கதைக்கு மதிப்பு கொடுக்கிற தயாரிப்பாளர்கள். கதைக்குத்தான் ஒரு ஹீரோவை சொல்வேன். இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்கிறபோது, அடிச்சா திருப்பி அடிக்கக்கூடாது அடிவாங்கனும். அந்த மாதிரி ஹீ ரோ யார் என்கிறபோது, விஜயசேதுபதியை யோசித்தேன். அவர் பண்ணிய படங்கள் பிடிக்கும்.
இதே கதையை வேறொரு ஹீரோவிடம் சொன்னபோது எனக்கு அவளோதான் பைட்டா என்றார். இன்னொருவர் தூங்கியே விட்டார். ஆனால் விஜயசேதுபதி, கதை சொல்லி முடித்ததும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தவர், கல்பனா எ ன்ற பெண்ணின் கேரக்டரில் என்ட்ரியில் சில காட்சிகளை எக்ஸ்ட்ராவாக வைக்கலாமே என்றார். எனக்கு இன்னும் காட்சி வேண்டும் என்று கேட்காமல் படத்தில் எட்டாவது ஒன்பதாவது வரும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறார். அதை ஞாபகம் வச்சி கேட்கிறார். இந்தமாதிரி ஒரு ஹீரோ தமிழ் இன்டஸ்ட்ரியில் இல்லை. சுயநலமாகத்தான் இருப்பார்கள். அந்த சமயம் மூன்று படங்களில் பண்ணுவதாக இருந்தவர் அந்த படங்களை தூக்கி போட்டு விட்டு இந்த படத்தில் நடிக்க வந்தார் விஜயசேதுபதி.
படத்தில் ஒரு கேரக்டர் ஓப்பனாக மனதில் தோன்றியதை பேசனும். ஒரு தப்பு நடந்தா அதைப்பத்தியும் ஓப்பனாக பேசனும். கட்சோட பேசனும். இது யார் பண்ணினா நல்லாயிருக்கும் என்கிறபோது டிஆர்சார்தான் ஞாபகத்துல வந்தாங்க. பண்ணுவாரா என்று நினைத்தபோது, ஒரு உதவியாளர் மூலம் அவரை சந்தித்தேன். எனது கேமரா வேலைகளைப்பற்றி பேசியவர், நடிக்க ஒத்துக்கொள்ளவே மாட்டேங்கிறார். ஒருவேளை நம்மை கேரக்டர் கொடுத்து கலாய்க்கப்போறாங்களா என நினைக்கிறாரோ என்று எனக்கு தோன்றியது. அவரிடம் திருப்பி திருப்பி கேட்ட காரணம் இந்த கேரக்டர் அவர் பண்ணினாதான் நல்லாயிருக்கும் என்பதினால்தான். அவர் பண்ணவில்லை என்றால் ஏதோ ஒன்று இழந்தது போல் இருக்கும். படத்துல பெரிய பலம் அவர்தான்.
படப்பிடிப்பு தளத்தில் எங்க எல்லோருக்கும் பிடித்த சின்ன டயலாக் மாற்றக்கூட நம்மளிடம் கேட்பார். அதேமாதிரி மடோனாவும் ஒவ்வொரு கேரக்டரையும் உன்னிப்பாக கேட்டு நன்றாக நடித்துள்ளார். இன்னொரு முக்கியமான வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். கதையை கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டார். விஜயசேதுபதி, டிஆர் சாருக்கு ஒரு சரியான போட்டியாக இந்த படத்துல விக்ராந்தின் நடிப்பு இருக்கும். பாண்டியராஜ் சார் கதையைகூட கேட்கல. அதெல்லாம் வேண்டாம் நீங்க கூப்பிட்டீங்க நான் பண்றேன் என்று வந்து நடித்தார்.
அயனில் பண்ணிய ஆகாஷ், இந்த படத்துல ஒரு நார்த் இந்தியன் கேரக்டருக்கு நார்த் இந்தியனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரை புக் பண்ணினோம். அயனில் வேற மாதிரியாக இருப்பார். இதில் ரொம்ப ஸ்டைலாக இருப்பார். மொத்தத்துல விஜயசேதுபதியில் இருந்து டிஆர் சார் வரை கொடுத்த சப்போட்ல இந்த கவண் படம் திருப்தியாக வந்திருக்கு. நல்ல படம் பண்ணியிருக்கோம் என்று தலைநிமிர்ந்து சொல்ல தைரியம் கொடுத்திருக்கு என்கிறார் கே.வி.ஆனந்த்.