பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விதார்த் ஒரு புடம் போடப்பட்ட நடிகன். எந்த படமாக இருந்தாலும் அதை அனுபவிச்சி பண்ணக்கூடிய நடிகர் என்று ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் டிரெய்லர் விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் வாழ்த்திப்பேசினார்.
மேலும், எங்கிருந்து அவருடைய நடிப்புக்கான தேடல் ஆரம்பிக்கிறாருன்னு எனக்கு தெரியும். அவர் வெயிட் பண்ணனும். அவர் ஒரு புடம் போடப்பட்ட ஒரு நடிகன் என்று நான் உத்தரவாதம் தருவேன். வெறும் நடிகனாக கனவு காண்பது மட்டுமல்ல, நடிகராக தன்னை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரு நடி கனின் முதல் தேடலாக உள்ளது. அந்த தேடல் விதார்த்திடம் உள்ளது.
ஒரு படத்தில் பார்க்கிறேன். ஒரு மூலையில் நிற்கிறான். என்னப்பா என்று கேட்டால், சின்ன வேடம்தான் ஆனா நல்ல வேடம் சார் என்கிறார். நாடக நடிகனுக்கு மட்டும்தான் ஒரு நிகழ்வின் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கின்ற பக்குவம் இருக்கும். விதார்த்தின் உழைப்புக்காக இந்த படம் ஓடும். ஆட்டக்கார அலமேலு, அதுதான் ஒருகாலத்தில் மிகப்பெரிய படம். அன்றைக்கு ஆடுதான் பெரிய படமாச்சு. அதேபோல் இந்த ஒரு கிடாயின் கருணை மனு படமும் மனசுக்கு நெருக்கமான படம். அதை விட பெரிய வெற்றியடைய வேண்டும் என்றார் நாசர்.