‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தன் இசையில் உருவான பாடல்களை, உரிய அனுமதியின்றி பாடினால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா, நோட்டீஸ் அனுப்பினார். இதனால், இனி, இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என, எஸ்.பி.பி., அறிவித்தார். இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்க வேண்டாம். இறைவன் படைப்பில் அனைவரும் நல்லவர்கள்; சமமானவர்கள் என, குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம், சமூக வலை தளங்களில், கருத்து மோதல்களை ஏற்படுத்தி உள்ளன. ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛இளையராஜா - எஸ்.பி.பி.,யின் மோதல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இதில், விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும் என, நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.