ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவிற்கு துரோகம் செய்தால் சும்மா விடமாட்டேன் என, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் மதுரையில் பேசினார். சென்னையில் ஏப்.,2ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் தயாரிப்பாளர் தாணு அணிக்கு எதிராக நம்ம அணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கிய விஷால் மதுரையில் பேசியதாவது...
ஒரு தயாரிப்பாளர் படத்திற்கு பூஜை போட தேங்காய் வாங்கிய நாள் முதல், படத்தை வெளியிடும் நாள் வரை நாங்கள் துணையாக இருப்போம். எங்கள் அணியில் தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண தனித்தனி குழுக்கள் உருவாக்கப்படும். இந்த தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், நடிகர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. சினிமாவிற்கு யார் துரோகம் செய்தாலும் சும்மா விடமாட்டேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் நான் இதுபோன்ற பதவிக்கு வரவில்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும், என்றார்.