விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட நடிகை ரம்பாவுக்கு கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை, 2010ல், ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
தன்னுடன் சேர்ந்து வாழ, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை, குடும்ப நல நீதிமன்றத்தில், 2016 அக்டோபரில், ரம்பா மனு தாக்கல் செய்தார். மேலும், மகள்களின் படிப்பு, மருத்துவ செலவுகளுக்கு, மாதம், 2.50 லட்சம் ரூபாய், இடைக்காலமாக வழங்கவும் கோரியிருந்தார். இதற்கிடையே, நடிகை ரம்பா சென்னை ஐகோர்ட்டில் தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி மற்றொரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பா, தன்னுடைய குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இதேப்போல் இந்திரகுமாரும் ஆஜரானார்.
இதையடுத்து நீதிபதிகள், 'இது குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கு என்பதால், நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி, இருவரும் தங்களுக்குள் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.