டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
யார் ரசிகருக்கு உதவினார் சூர்யா, அதற்கு ஏன் விஜய் நன்றி சொல்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் தலைதூக்கவே செய்யும். விஜய் ரசிகருக்குத்தான் சூர்யா உதவினார், அதற்குத்தான் நன்றி கூறியுள்ளார் விஜய். என்ன உதவி செய்தார் சூர்யா..? அதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்து விடுவோம் ‛சி-3' பட புரமோஷனுக்காக கடந்த ஜனவரி மாதம் கேரளாவுக்கு சென்றிருந்த சூர்யா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார். அதில் ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் தன்னை பார்க்க துடிப்பதை அறிந்து அவரை அருகில் வரவழைத்து பேசினார்..
அப்போதுதான் அவர் விஜய் ரசிகர் என்பது தெரிய வந்தது, அவர் தன் கையில் உள்ள கிப்ட் பார்சல் ஒன்றை சூர்யாவிடம் கொடுத்து, இதை தனது சார்பில் விஜய்யிடம் சேர்த்துவிட முடியுமா என கேட்டுள்ளார்.. ரசிகர் தன்னை தேடிவந்து உதவி கேட்டதில் நெகிழ்ந்த சூர்யா, மகிழ்சியுடன் சம்மதித்தார். அந்த பரிசுப்பொருளை சமீபத்தில் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தை சார்ந்து முக்கிய நபர் வாயிலாக விஜய்யிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்தார்.
சம்பந்தப்பட்ட நபர் விஜய்யின் மேனேஜர் மூலமாக விஷயத்தை விஜய்யின் காதுகளுக்கு கொண்டு செல்ல, அவரை தான் தற்போது நடித்து வரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொன்னார் விஜய். கேரள ரசிகர் கொடுத்த கிப்ட்டை பெற்றுக்கொண்டதுடன், அதனை முழு மனதுடன் தன்னிடம் சேர்க்க உதவிய சூர்யாவுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார். விஜய் தனது புதிய படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து அசந்துபோன சூர்யாவின் பிரதிநிதி வேறு வழியின்றி விஜய்யுடன் இணைந்து போட்டோ எடுக்காமல் வருத்ததுடன் திரும்பி வந்தாராம்.