'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட நாட்களெல்லாம் ஆகவில்லை மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் அணிந்து கடந்த வருடம் தானே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியானது. கூடவே அவருக்கு 'கசப்பான' அனுபவங்களையும் தந்துவிட்டது. ஆம், அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர் கேரளாவில் மாதர்சங்க அமைப்புகள் மம்முட்டிக்கு எதிராக கொடி பிடித்து கோஷம் போடும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது.
மக்களிடம் தனது போலீஸ் கேரக்டர் குறித்த பாசிடிவான எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என மம்முட்டி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகி ப்ரெஷ்ஷான போலீஸ் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷாம்தத்.. ஆம்.. 100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது இயக்குனராக மாறியிருக்கும் அதே ஷாம்தத் தான்.. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரி வேடமாம். அதிரடியான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்..