பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதுவரை இப்படத்தின் சிறப்பு திரையிடலை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது வழக்கறிஞருக்கு சர்கார்-3 படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே சர்கார்-3 படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.