ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதுவரை இப்படத்தின் சிறப்பு திரையிடலை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது வழக்கறிஞருக்கு சர்கார்-3 படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே சர்கார்-3 படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.