நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
வருண் தவான் - ஆலியா பட் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியான இப்படம் ‛ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை சுமார் 75 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ‛துல்ஹனியா' படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் சாசாங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாசாங், இதுப்பற்றி கூறியதாவது... ‛‛பத்ரிநாத் கி துல்ஹனியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, நிறையபேர் பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டு ‛துல்ஹனியா' படங்களின் வரிசையில் மூன்றாம் பாகத்தை எடுக்க ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் மூன்றாம் பாகத்தை இயக்குவேன், ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. தற்போதைக்கு பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.