ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருண் தவான் - ஆலியா பட் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியான இப்படம் ‛ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை சுமார் 75 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ‛துல்ஹனியா' படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் சாசாங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாசாங், இதுப்பற்றி கூறியதாவது... ‛‛பத்ரிநாத் கி துல்ஹனியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, நிறையபேர் பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டு ‛துல்ஹனியா' படங்களின் வரிசையில் மூன்றாம் பாகத்தை எடுக்க ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் மூன்றாம் பாகத்தை இயக்குவேன், ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. தற்போதைக்கு பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.